பவானிசாகர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

பவானிசாகர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

Update: 2024-10-05 04:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பவானிசாகர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு பவானிசாகர் அருகே காராச்சிகொரையில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை அம்மனை தரிசிப்பதற்காக கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது கோவிலின் உண்டியல் இருந்து உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரோ மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது இது குறித்த தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உண்டியலை பார் வையிட்டு விசாரணை மேற் கொண்டனர் உடைக்கப் பட்ட உண்டியலில் ரூ.5 ஆயிரம் வரை பக்தர்கள் காணிக்கையாக பணத்தை செலுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து காணிக்கையை திருடி சென்றமர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Similar News