திமுக மகளிர் மற்றும் தொண்டர் அணி சார்பில் பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!

திமுக மகளிர் மற்றும் தொண்டர் அணி சார்பில் பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

Update: 2024-10-05 11:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திமுக மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில்  பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையம் பகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் . திமுக கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூர் வடக்கு மாவட்டம் பூமலூர் ஊராட்சி நடு வேலம்பாளையம்  பகுதியில்  வடக்கு மாவட்ட கழக செயலாளர்  தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ்  தலைமையில்  வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்  கலைச்செல்வி  ஏற்பாட்டில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் மாலதி நாகராஜ் , மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் குமார்,ஒன்றிய கழக செயலாளர்கள் சோமசுந்தரம்,கிருஷ்ணமூர்த்தி,அசோகன், மாநில மகளிர் பிரச்சார அணி செயலாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்  ஆனந்தி,ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெயந்தி,ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மஞ்சுளா,மாவட்ட மகளிர் தொண்டரணி தலைவி விஜயா,மாநகர அமைப்பாளர்கள் கௌரி,மகேஸ்வரி, சுகாசினி,உமா மகேஸ்வரி, மகாராணி,அமுதா, சிவானந்தி, மோகனா, கனிமொழி, உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் . அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது .

Similar News