திருக்கோவிலூரில் பைக் திருடியவர் கைது

கைது

Update: 2024-10-06 05:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலுார் அடுத்த துரிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 35; திருக்கோவிலுாரில் நகைக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது ஸ்பிளண்டர் பைக் கடந்த 30ம் தேதி திருடு போனது.புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வாகன சோதனையின் போது, சந்தேகத்தின் பேரில் பிடித்த நபரிடம் விசாரித்தனர். அதில், அவர் விழுப்புரம், நாபாள தெருவைச் சேர்ந்த வெங்கடேசன், 50; என்பதும், பன்னீர்செல்வத்தின் பைக்கை திருடியவர் என்பதும் தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

Similar News