எஸ்.பி., தலைமையில் சாராய ரெய்டு

ரெய்டு

Update: 2024-10-06 05:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் 8 சப் இன்ஸ்பெக்டர்களை உள்ளடக்கிய 8 குழுவினரும், சிறப்பு அதிரடி படை போலீசாரும் கல்வராயன்மலையில் நேற்று மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர்.ஈச்சங்காடு, தேக்கம்பட்டு, கண்ணுார், வண்டகப்பாடி, அரவங்காடு, வாரம் உட்பட 10 கிராமங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஈச்சங்காடு மற்றும் வண்டகப்பாடி கிராமங்களில் சாராயம் காய்ச்ச பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த 2,800 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வண்டகப்பாடியை சேர்ந்த செல்வராஜ், அருள், செந்தில், ஈச்சங்காட்டைச் சேர்ந்த பொன்னுதுரை ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர். மேலும், கண்ணுார் காட்டுகொட்டாய் பகுதியில் பாக்கெட்டுகளில் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, குபேந்திரன், 42; என்பவரை கைது செய்தனர்.

Similar News