சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்

ஊர்வலம்

Update: 2024-10-06 06:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம் இன்னர் வீல் கிளப் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்திற்கு, இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷிணி ரமேஷ் தலைமை தாங்கினார். கடைவீதி மும்முனை சந்திப்பிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பின், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் மதிழயகன், ரோட்டரி முன்னாள் தலைவர் சுதாகரன், தீபா, அகல்யா மற்றும் இன்னர் வீல் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Similar News