மைசூர் எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி!

தூத்துக்குடியில் மைசூர் எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி!

Update: 2024-10-06 06:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடியில் தண்டவாள பராமரிப்பு பணி நிறைவு பெறாததால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.  தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள 1ஆம் ரயில்வே கேட், பராமரிப்பு பணி காரணமாக இன்று (அக்.5) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் பணிகள் தற்போது வரை நிறைவு பெறவில்லை.  இதனால் இன்று மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பவில்லை. இதையடுத்து தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

Similar News