திருக்கோவிலூர்:இறகு பந்து போட்டி 

போட்டி

Update: 2024-10-06 06:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் அண்ணா பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கிடையேயான இறகு பந்து போட்டி நடந்தது. கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் போட்டியை துவக்கி வைத்தார். செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் முஸ்டாக் அகமது முன்னிலை வகித்தனர். தாளாளர் பழனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 82 அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரிகளில் பயிலும் 36 அணிகள் பங்கேற்றன. ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சிவப்பிரகாஷ், நித்திஷா செய்திருந்தனர்.

Similar News