பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நா.த.க ஆர்ப்பாட்டம்!

எட்டையபுரத்தில் அடிப்படை வசதிகளை அமைத்து தரக்கோரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Update: 2024-10-06 06:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை அமைத்து தராத பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்து எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பில்  மாவட்ட செயலாளர் பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு "எட்டையபுரம் 3-வது வார்டு பகுதியில் சாலை வசதிகள் அமைதி தர வேண்டும்,3-வது வார்டு பகுதியில் மயானம் அமைத்து சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.எட்டையபுரம் பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க அனைத்து வார்டு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா அமைத்திட வேண்டும். 3-வது வருட முக்கிய வாடுகளில் பெண்களுக்கு உரிய கழிப்பிட வசதிகள் அமைத்து தர வேண்டும். எட்டயபுரம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் முறையாக வாரந்தோறும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும்.  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News