வீரபாண்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பேருந்து அடியில் சிக்கி தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு

விபத்து

Update: 2024-10-06 08:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே பயணிகளை ஏற்றுக் கொண்ட வந்த தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீ பற்றி எரிந்து விபத்து அரை மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர் மதுரையில் இருந்து கம்பம் நோக்கி தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது அப்போது தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே போடேந்திரபுரம் விளக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த சாலையில் கூழையனூர் பகுதியைச் சேர்ந்த சீனி தேவர் என்பவரின் மகன் அரசாங்கம் (57) பேருந்தின் முன்பக்கம் மோதி பேருந்து அடியில் சிக்கிக்கொண்டார் சிறிது தூரம் பேருந்து இழுத்துச் சென்ற நிலையில் பேருந்தின் டீசல் டேங்கில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறடித்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓட தொடங்கினர் இதில் பேருந்து அடியில் சிக்கிக் கொண்ட அரசாங்கம் வெளியே வர முடியாமல் மேலும் தீ பற்றி எரிய தொடங்கியது பின்னர் இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவே போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் மேலும் தீ மளமளவென தீ எரிய தொடங்கிய நிலையில் போடியில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைத்து சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர் இதில் அரசாங்கம் என்பவர் பேருந்து அடியில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் தெரிந்த அரசாங்கத்தின் உறவினர்கள் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Similar News