சேவூர் அரசு பள்ளியில் இலவச மருத்துவ முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் வேலூர் தினேஷ் மருத்துவமனை சார்பில் எலும்பு மூட்டு மற்றும் முதுகு தண்டு வலிகளுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2024-10-06 19:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் வேலூர் தினேஷ் மருத்துவமனை சார்பில் எலும்பு மூட்டு மற்றும் முதுகு தண்டு வலிகளுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சேவூர் ஊராட்சி தலைவர் ஷர்மிளா தரணி தலைமை தாங்கினார். ஆரணி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் இம்முகாமினை துவக்கி வைத்தார். இதில் ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ். எஸ்.அன்பழகன், ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மாமது, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எலும்பு மூட்டு மாற்று தசை முதுகுத்தண்டு சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் என் அருண் பிரகாஷ் கலந்துகொண்டு முதுகு தண்டுவழி மூட்டு வலி உள்ள முதலாளிகளுக்கு பரிசோதனை செய்தார். மேலும் சிலருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Similar News