இலவச கண் சிகிச்சை முகாம்.

ஆரணி.அக்.7 வந்தவாசி அருகே விளாநல்லூர் ஊராட்சி மன்றம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

Update: 2024-10-06 19:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் விளாநல்லூர் ஊராட்சி மன்றம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பார்வை குறைபாடு தடுப்பு சங்கம், அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து கிருஷ்ணாவரம் கூட்ரோடு பகுதியில் நடத்திய கண் சிகிச்சை முகாமினை விளாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இம்முகாமில் பொது மக்களுக்கு கண்புரை, கண் நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, விழித்திரை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்துகொண்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டனர். இம்முகாமில் விளாநல்லூர் ஊராட்சி தூய்மை காவலர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

Similar News