மணவாடி- ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்க முதல் மாநில மாநாட்டில் முடிவு.

மணவாடி- ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்க முதல் மாநில மாநாட்டில் முடிவு.

Update: 2024-10-07 02:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மணவாடி- ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்க முதல் மாநில மாநாட்டில் முடிவு. கரூர் மாவட்டம் மணவாடி செல்வநகர் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மையத்தின் சார்பில், 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு அளித்த வாக்குறுதிபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி முதல் மாநில மாநாடு மாநிலத் தலைவர் S.தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. அக்டோபர் 5-ம் தேதி துவங்கி 6-ம் தேதி வரை வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் வரவேற்பு குழு தலைவராக தமிழ்வாணன், முன்னாள் மாநில தலைவர் R.தமிழ்ச்செல்வி அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்க இலக்கியத்தில் துணைத் தலைவர் சதீஷ் ரானா, முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பார்த்தசாரதி ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் மாநில பொதுச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாநில அளவிலான நிர்வாகிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் நிறைவாக நேற்று அக்டோபர் 6-ம் தேதி மாலை செய்தியாளர்களை சந்தித்த பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், எங்களது முக்கிய கோரிக்கையான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழக முழுவதும் தற்செயல் விடுப்பு எடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தார்.

Similar News