பங்களாப்புதூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

பங்களாப்புதூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Update: 2024-10-07 03:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பங்களாப்புதூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் புஞ்சைதுறையம்பாளையம் கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவருடைய மகன் நந்தீஸ்வரன் (வயது 27). விவசாய வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நந்தீஸ்வரன் விபத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 2-ந் தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நந்தீஸ்வரன் நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News