ஹரியானா தேர்தலில் வெற்றி நாமக்கல்லில் பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மனோகரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார்.

Update: 2024-10-08 13:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஹரியானா மாநிலம் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க.வினர் நாமக்கல் பஸ் நிலையம் அருகில் உள்ள மணிக்கூண்டு அருகில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மனோகரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார். இந்த நிகழ்வில் மத்திய அரசு நலப்பிரிவின் மாநில துணைத் தலைவர் லோகேந்திரன்,மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் சின்னுசாமி, விருந்தோம்பல் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சிலம்பரசன், விருந்தோம்பல் பிரிவு நகர தலைவர் பால்ராஜ், முன்னாள் நகர பொதுச் செயலாளர் லண்டன் செந்தில்குமார், அக்ரி இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வரதராஜ், முருக பூபதி, சம்பத்குமார், ராணுவப் பிரிவு மாவட்ட தலைவர் ராம நந்தகோபால், பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் கந்தசாமி, இராஜ சக்திவேல் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News