அதிமுக மனித சங்கிலி போராட்டம் ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா பங்கேற்பு..

அதிமுக மனித சங்கிலி போராட்டம் ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா பங்கேற்பு..

Update: 2024-10-08 14:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சொத்து வரி உயர்வு: தமிழ்நாடு முழுவதும் அதிமுக மனித சங்கிலி போராட்டம் ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா பங்கேற்பு. தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு, விலையேற்றம் ஆகியவற்றை கண்டித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மனித சங்கிலி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராசிபுரம் நகர கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே அதிமுக தொண்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் கழக மகளிர் அணி இணைச்செயலாளர் டாக்டர் வெ.சரோஜா கலந்து கொண்டு தமிழக அரசின் அவலநிலை குறித்து எடுத்துப் பேசி கண்டன உரை ஆற்றினார். தொடர்ந்து தமிழகத்தில் மின் கட்டணம், சொத்து வரி, பத்திர பதிவு கட்டணம், குடிநீர், கழிவு நீர் கட்டணம் ஆகியவை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து பல்வேறு பகுதிகளில் மனித சங்கிலி போராட்டத்தை அதிமுகவினர் நடத்தினர் . அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து பதாகங்களை ஏந்தி அதிமுகவினர் கோஷமிட்டனர். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, அதிகார துஷ்பிரயோகம், மூன்று முறை மின்கட்டண உயர்வு, பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை குறிப்பிட்டும், சிறுமியருக்கு அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள், தமிழகத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு, உள்ளிட்டவை குறித்தும் பொதுமக்களிடத்தில் கோஷங்கள் எழுப்பி எடுத்து கூறினர். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News