திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது டியக்ட்டர் பறிமுதல்!

Update: 2024-10-12 05:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி அருகே அனுமதியின்றி மண் கட்டத்தில் ஈடுபட்டவர் கைது!டிராக்டர் பறிமுதல்!. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஏரிகளில் மண் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும் அதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்தும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி அருகே ஏரியில் சிலர் 10 க்கும் மேற்பட்ட வாகனங்களில் மண் கடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஏரிக்கரை ஓரம் மண் எடுப்பதால் கரைசறியும் அபாயம் உள்ளது என்று அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். தடுக்க சென்றால் தகராறு செய்வதாகும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் கொடுமாம்பள்ளி பகுதியில் சோதனை மேற்கொண்ட போது அதே பகுதியைச் சேர்ந்த காளி என்பவரின் மகன் கண்ணதாசன் கொடுமாம்பள்ளி ஏரியில் டிராக்டரில் மண் எடுத்துக்கொண்டு சென்றதை அறிந்து டிராக்டரை பறிமுதல் செய்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை கண்ணதாசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News