ராசிபுரம் அருகே ஆடு திருடிய இளைஞர் கைது..

ராசிபுரம் அருகே ஆடு திருடிய இளைஞர் கைது..

Update: 2024-10-17 13:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி(55) இவர் தனது தோட்டத்தில் 5க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை ரங்கசாமி உறங்கிக் கொண்டிருந்ததாகவும் அப்போது இளைஞர் ஒருவர் ஆடு திருடி செல்வது தெரியவந்ததை அடுத்து ரங்கசாமி கூச்சலிடேவே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இளைஞர் இருசக்கர வாகனத்தில் ஆட்டை தூக்கி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ரங்கசாமி ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே புகாரை பெற்ற காவல் துறையினர் காவல் ஆய்வாளர் பொறுப்பு சுகவனம் அவர்களின் ஆலோசனைப்படி காவல் உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்,கீதாலட்சுமி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இளைஞர் குட்டாலடம்பட்டி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் சூரியபிரகாஷ்(19) என்ற இளைஞரை ராசிபுரம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்..

Similar News