போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களால் பக்தர்கள் அவதி

மானாமதுரை வீர அழகர் கோயிலை மறைத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்துவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

Update: 2024-10-18 03:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விபத்து, திருட்டு வழக்கு மற்றும் மணல் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை காவல் நிலையம் எதிர்புறம் உள்ள வீர அழகர் கோயில் சுற்றுச்சுவரை ஒட்டி நிறுத்தி உள்ளனர். அப்பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுவதால் பக்தர்கள் கோயிலை சுற்றி வர முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தனர். சித்திரை திருவிழாவின் போது இப்பகுதியில் மண்டகப்படி அமைக்கப்படுவதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை போலீசார் கடந்த திருவிழா நேரத்தில் வேறு இடத்திற்கு மாற்றினர். தற்போது கடந்த 2 மாதங்களாக மீண்டும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்தி வருவதால் அப்பகுதியில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது.

Similar News