சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

திருப்புத்துார் நான்கு ரோடு சந்திப்பு சாலையில் உள்ள பள்ளத்தை கிராவல் பரப்பி பராமரிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-10-18 04:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் நகரின் முக்கியமான போக்குவரத்து சந்திப்புக்களில் நான்கு ரோடு சந்திப்பும் ஒன்றாகும். இங்கு புதுக்கோட்டை,காரைக்குடி, கண்டரமாணிக்கம்,மதுரைரோடுகள் சந்திக்கின்றன. இப்பகுதியில் வாகனங்கள் தொடர்ச்சியாக ஒன்றையொன்று குறுக்காக கடந்து செல்வதுண்டு. இந்த சந்திப்பில் அண்மையில் குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது.அதில் தற்காலிகமாக மூடாமல் விடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் பள்ளத்தில் கடந்து செல்ல சிரமத்திற்குள்ளாகின்றன. மழை காலம் என்பதால் கற்கள் பெயர்ந்து பள்ளம் பெரிதாகும் வாய்ப்புள்ளது. குறிப்பாக டூ வீலர்கள் இதில் தடுமாறி செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து அபாயம் காணப்படுகிறது. இதனால் திட்டப்பணிகள் நிறைவடையும் வரை கிராவல் போட்டு பள்ளத்தை சமப்படுத்த வாகன ஓட்டிகள் கோரியுள்ளனர்.

Similar News