நாட்டுத்துப்பாக்கி பதுக்கியவர் கைது

நாட்டுத்துப்பாக்கி பதுக்கியவர் கைது

Update: 2024-10-20 06:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாட்டுத்துப்பாக்கி பதுக்கியவர் கைது பவானிசாகர் அருகே உள்ள பெரியகள்ளிப்பட்டி கிராமத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக பவானி சாகர் போலீசாருக்கு தகவல் கிடைத் தது.போலீசார் நேற்று பெரியகள்ளிப்பட்டி கிராமத்திற்கு சென்று நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்துள்ளது குறித்து தேடுதல் வேட்டை நடத்தியதில், அதே கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வெள்ளியங்கிரி, 33, முருகன் நகரில் உள்ள தன் வீட்டின் பின்புறம் முட்புதரில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந் ததை கண்டறிந்தனர். விசாரணையில் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவந்தது. நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், வெள்ளியங்கிரியை கைது செய்தனர்.

Similar News