சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் குட்டியுடன் உலா வந்த யானை

சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் குட்டியுடன் உலா வந்த யானை;

Update: 2024-12-06 07:40 GMT
சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் குட்டியுடன் உலா வந்த யானை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமம் தற்போது மழை பெய்து பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. கடம்பூர் வன பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக காட்டை விட்டு வெளியே வந்து சொல்வது வழக்கம். இந்த நிலையில் கே என் பாளையத்திலிருந்து கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை தனது குட்டியுடன் சாலையை கடந்து சென்றது. இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் பார்த்து ரசித்தனர். சிலர் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்

Similar News