ஈ.வி.கே..எஸ்.இளங்கோவன் மரணம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே..எஸ்.இளங்கோவன் மரணம்;
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளக்கோவன் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (76) அறிவிக்கப்பட்டார். என் மகன் விட்டுச்சென்ற பணியைத் தொடர்வதற்காக இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று இடைத்தேர்தலில் களமிறங்கினார். ஈவிகேஎஸ் இளங்கோவன். அவருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏராளமான அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் களப்பணியாற்றி 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவைத் தவிர, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் கட்டுத்தொகையை இழந்தனர். பெரியாரின் பேரனான இளங்கோவனின் தந்தை ஈவேகி சம்பத், தாயார் சுலோச்சனா சம்பத். மனைவி வரலட்சுமி இளங்கோவன். இரண்டு மகன்கள் திருமகன் ஈவெரா (மறைவு), சஞ்சய் சம்பத். பி.ஏ.பொருளாதார பட்டப்படிப்பு படித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் மாணவரணி செயலாளர், ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு நகர காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டியின் மாநில பொதுசெயலாளராக பதவி வகித்த இளங்கோவன், 2000ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்தார். பின்னர் 2003ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக பதவி வகித்தார். 2வது முறையாக 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவியை வகித்தார். 1984ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு கோபி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ஈரோடு தொகுதியிலும், 2014-ம் ஆண்டு திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும், 2019-ம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். 2024 பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார் பெயர் - ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றோர் - ஈவிகே சம்பத் - சுலோசனா சம்பத் பிறந்த தேதி - 21.12.1948 கல்வித்தகுதி - பி.ஏ. (பொருளாதாரம்) மனைவி - வரலட்சுமி இளங்கோவன் மகன்கள் - திருமகன் ஈவெரா (மறைவு) சஞ்சய் சம்பத் வகித்த பதவிகள் - * 1984-87 – எம்.எல்.ஏ. (சத்தியமங்கலம் தொகுதி) * 1998-2000 – பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி * 2000 – 2002 – தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி * 2002 – 2003 – செயல் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி * 2004 – மக்களவை உறுப்பினர் (கோபி தொகுதி) * 2004 – 2009 – மத்திய இணை அமைச்சர் * 2015- 16 – தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. (கடந்த 2009-ம் ஆண்டு ஈரோடு தொகுதியிலும், 2014-ம் ஆண்டு திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும், 2019-ம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்) 2024 பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக இ வி கே எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். உடல் நல குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்