உளுந்துார்பேட்டை அறிவு திருக்கோவிலில் உலக தியான தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு நிர்வாக அறங்காவலர் பாலகணபதி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பொன் ராவணன், காளிராஜ், பேராசிரியர் சக்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மன்ற செயலாளர் பேராசிரியர் ஆதி அண்ணாமலை வரவேற்றார். மன்ற பேராசிரியர் குணசேகரன் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள், மன அமைதி குறித்து விளக்க உரையாற்றினார். தொடர்ந்து, நிர்வாகிகள் தியானம் மேற்கொண்டனர்.