தாராபுரத்தில் நாளை மின்தடை
தாராபுரத்தில் நாளை மின்தடை மின்வாரிய வட்டச் செயற்பொறியாளர் கோபால்சாமி அறிவிப்பு;
தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் கோபால்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தாராபுரம் துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றது.எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாராபுரம் நகர் பகுதிகல், தாராபுரம் புறநகர் வீராச்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப் பாளையம், வண்ணாப்பட்டி பகுதிகள், மடத்துப்பாளையம், உப்பார் டேம், அம்மாபட்டி, பஞ்சப்பட்டி, சின்னக்கம்பாளையம், சின்னபுத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம், கொண்டரசம்பாளையம், குள்ள காளிபாளையம், அலங்கியம், குள்ளப்பாளையம், மதுக்கம்பாளையம் மற்றும் கண்ணாங்கோவில் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.