உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடலுக்கு சார் ஆட்சியர் கோகுல் அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.

உடல் உறுப்புகள் (கிட்னி,லிவர், தோல்) சதானம் செய்யப்பட்டது.;

Update: 2025-01-23 17:19 GMT
உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடலுக்கு சார் ஆட்சியர் கோகுல் அரசு சார்பில் மரியாதை செலுத்தினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் மஜீரா VRSS புரம் கிராமத்தைச் சேர்ந்த, செந்தில்குமார்(35), த/பெ. எல்லப்பன் என்பவர், சென்னையில் காஸ் சிலிண்டர் லாரியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது, தவறி விழுந்ததனால், நேற்று (22.01.2025) இரவு 7 மணியளவில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பெற்றோர் சம்மதத்துடன் இறந்தவரின், உடல் உறுப்புகள் (கிட்னி,லிவர், தோல்) சதானம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (23.01.2025) பிரம்மதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட அவரின் உடலுக்கு இரவு 8 மணி அளவில் பெரம்பலூர் சார் ஆட்சியர் சு.கோகுல் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது வேப்பந்தட்டை வட்டாட்சியர் திரு.மாயகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Similar News