சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ரஜத்சதுர்வேதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பதிவு செய்த வழக்கு விபரங்கள், கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, வாரண்ட் நிலுவைகளை உடன் நிறைவேற்றவும், போதை பொருட்கள் விற்பனையை தடுக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, தனசேகரன், லோகேஸ்வரன் உடனிருந்தனர்.