சாலையில் வீணாக ஓடும் குடிநீர்

மதுரை மேலூர் சாலையில் வீணாக குடிநீர் ஓடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது;

Update: 2025-01-28 06:35 GMT
மதுரை மாவட்டம் மேலூரில் யூனியன் அலுவலகம் மற்றும் அதை சுற்றி உள்ள காந்திநகர், எஸ்எம் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் தாலுகா அலுவலகம் முன்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து நகராட்சி நிர்வாகம் ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.16 விலைக்கு வாங்கும் தண்ணீர், இப்படி ரோட்டில் வீணாவதால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News