திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூர் அ.வெ.நா.செ அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு இன்று மதியம் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய உணவை உண்ட 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜி அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு மாணவர்களின் பெற்றோர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.