தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-02-02 03:55 GMT
சங்கராபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்டார தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்றார். யாசின் உசேன், தமிழரசி, ஷாஜகான், ஜான் ரத்தினம் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் ராஜாராம் கோரிக்கைகளை வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில், பங்களிப்பு மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தேவேந்திரன் நன்றி கூறினார்.

Similar News