மருத்துவமனையில் அனுமதி

வாக்களிக்க வந்த போது மயங்கி விழுந்த பெண் மருத்துவமனையில் அனுமதி;

Update: 2025-02-06 10:04 GMT
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்துக்கு அந்த பகுதியை சேர்ந்த நாராயணி என்பவர் வாக்களிக்க வந்தார். அப்போது வரிசையில் நின்ற அந்த பெண் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Similar News