கடவூர்: கிராவல் மண் கடத்திய நபர் கைது

கடவூர்: கிராவல் மண் கடத்திய நபர் கைது;

Update: 2025-02-08 06:55 GMT
கடவூர்: கிராவல் மண் கடத்திய நபர் கைது கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டி இந்திய ஆயில் பெட்ரோல் பங்க் அருகே புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது செங்காட்டூரில் பட்டா நிலத்தில் உரிய அனுமதி சீட்டு இன்றி கிராவல் மண் கடத்தி வந்த சென்னம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (35) மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி பறிமுதல் செய்தனர்.சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Similar News