மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்கள்
பொது ஏலம் - 12-ம் தேதி நடக்கிறது;
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டத்தில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள 104 வாகனங்களை வருகிற 12-ம் தேதி பொது ஏலம் விட்டு அரசுக்கு ஆதாயம் செய்திட, பழைய வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வருகிற 11-ம் தேதி (செவ்வாய்) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாகனங்களை நேரில் பார்வையிட்டுக் கொள்ளலாம். வருகிற 12-ம் தேதி (புதன்) காலை 10 மணி முதல் வாகனங்கள் ஏலத்தில் விடப்படும். அன்றைய தினம் வாகனங்களை ஏலத்தில் எடுப்பவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையுடன் நேரில் ஆஜராகி, தங்கள் பெயர், முகவரியை காலை 8 மணி முதல் 9 மணி வரை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் ஏலம் விடும் குழுவினரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பொது ஏலம் மூலம் அதிக விலைக்கு கேட்கும் நபர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படும். மேலும் வாகனங்களுக்கான தொகையை உடனுக்குடன் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04365 247430 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.