நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு

மீண்டும் கப்பல் போக்குவரத்து - வருகிற 12-ம் தேதி தொடக்கம்;

Update: 2025-02-10 11:49 GMT
நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023- ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 -ம் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால், அதே மாதம் 23-ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து, காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 -ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது. வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து வருகிற 12- ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இனி வாரத்துக்கு செவ்வாய் கிழமை தவிர இதர 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும் எனவும், டிக்கெட் முன் பதிவுக்கு www.sailsubham.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும், சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Similar News