வக்ப் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம்.
SDPI கட்சியின் சார்பில் தேசம் முழுவதும் வக்ப் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது...;
வக்ப் திருத்த சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டது.. SDPI கட்சியின் சார்பில் தேசம் முழுவதும் வக்ப் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது... அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்ட SDPI கட்சி சார்பில் இன்று மாலை 4 மணி அளவில் காமராஜர் வளைவு அருகே வக்ப் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... SDPI கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் A. முஹம்மது ரபீக், மாவட்ட பொது செயலாளர் செய்யது அபுதாஹிர், மாவட்ட அமைப்பு பொது செயலாளர் அப்துல் கனி, மாவட்ட துணை தலைவர் மு. முஹம்மது பாரூக், மாவட்ட செயலாளர், அபுபக்கர் சித்தீக், மாவட்ட பொருளாளர் முகையதீன் பாரூக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாஜஹான் மற்றும் மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.