நள்ளிரவில் நிதி நிறுவன மாடியில் திடீர் தீ விபத்து

குமாரபாளையம் சரவணா தியேட்டர் எதிரில் உள்ள நிதி நிறுவன மாடியில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2025-02-16 14:44 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை சரவணா தியேட்டர் எதிரில் உள்ள நிதி நிறுவன மாடியில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க, நேரில் வந்த அவர்கள் தீயை போராடி அணைத்தனர். மின் கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News