புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும், அனுமதி இன்றி செயல்பட்ட குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்தும் விளக்கம் கேட்டு, வருவாய்த்துறை, கனிமவளத்துறை மற்றும் காவல்துறையினருக்கு சிபிசிஐடி காவலர்கள் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.