உடுமலையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலை நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்;
உடுமலை கச்சேரி வீதியில் சார்பு நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் உடுமலை வக்கீல் சங்கத்தின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல்கள் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரியும், வக்கீல்கள் சேம நல நிதியை உயர்த்தக் கோரியும் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.