மீன் இறங்குதல கட்டிடப் பணிகள் தாமதம் : அதிகாரிகளை கண்டித்த மாவட்ட ஆட்சியர்
மீன் இறங்குதல கட்டிடப் பணிகள் தாமதம் ஏன் ஒப்பந்ததாரர் மற்றும் மின்விளத்துறை அதிகாரிகளை கண்டித்த மாவட்ட ஆட்சியர்;
திருவள்ளூர் : பழவேற்காடு அதன் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் இருந்து கல்வி கற்கும் பெண் குழந்தைகள் சதவீதம் குறைந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது மாவட்ட ஆட்சியர் பிரதாப். மீன் இறங்குதல கட்டிடப் பணிகள் தாமதம் ஏன் ஒப்பந்ததாரர் மற்றும் மின்விளத்துறை அதிகாரிகளை கண்டித்த மாவட்ட ஆட்சியர் பழவேற்காட்டில் இளைஞர்கள் பெண்கள் அனைவரையும் பள்ளிக்கு படிக்க அனுப்பி வையுங்கள் மீனவ மக்களிடம் வேண்டுகோள் வைத்த மாவட்ட ஆட்சியர். பெண் பிள்ளைகளைப் படிக்க பள்ளிக்கு அனுப்பாவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் அன்போடு எச்சரித்த மாவட்ட ஆட்சியர் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் பழமையான டச்சு கல்லறை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வின் போது ஹிந்தி மொழியில் பேசி விவரங்களைக் கேட்டறிந்தார் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட இறால் மீன் உணவுப் பொருட்கள் மற்றும் பனை ஓலை கலை. பொருட்களை நல்ல முறையில் விற்பனை செய்ய ஆலோசனைகளை வழங்கிய அவர் பின்னர் அரங்கம்குப்பம் பகுதியில் மீன் இறங்கு தளம் புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையில் அந்தப் பணிகள் காலதாமதமாக நடைபெற்று வருவதை ஆய்வு செய்த ஆட்சியர் செப்டம்பர் மாதம் முடிக்க வேண்டிய பணிகளை முடிக்காமல் காலம் தாழ்த்தும் ஒப்பந்த பணியாளர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளை ஆட்சியர் கண்டித்து முறையாக பணிகளை செய்ய அறிவுறுத்தினார் கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க 20 நாட்களாகும் என தெரிவித்த நிலையில் இந்தக் கட்டிடத்திற்கு மின் இணைப்பு பொறுத்த 20 நாட்கள் தேவையா 20 நாட்களில் கட்டிட திறப்பு விழா நடத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார் மீன்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தலில் பணிகள் நடைபெறுவதாக மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்ததை தொடர்ந்து திடீரென அமைதியான அவர் எதுவென்றாலும் பணி முடிக்காதது காலதாமதம்தான் என்றும் விரைந்து கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்டித்தார் அப்போது மீனவ மக்கள் காட்டுப்பள்ளி துறைமுகம் வழியாக பழவேற்காடு சாலை வரை சாலை சீரமைக்க வேண்டும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் மீனவ மக்கள் கோரிக்கை வைத்தனர் அங்கு வந்த இளைஞர்களை பள்ளிக்கு படிக்க அனுப்பி வையுங்கள் பணியில் ஈடுபடுத்தாதீர்கள் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் விட்டுவிட்டால் கண்டிப்பாக உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் பெரும்பாலானவர்கள் பள்ளிக்கு செல்வதில்லை என்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். ஆட்சியர் ஆய்வுக்கு வந்த போது பழவேற்காடு பகுதியில் பெரும்பாலான மின்விளக்குகள் பட்டப் பகலிலேயே எரிவதை கண்டு அரசுத்துறை அதிகாரிகளை அவர் கண்டித்தார்