அரசு மருத்துவமனையில் உதவி துணை இயக்குனர் ஆய்வு
அரசு மருத்துவமனையில் அடையாள அட்டை அணியாத மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையை தூய்மையாக வைத்துக் கொள்ளாத மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகள் படுக்கைகள் கிழிந்து இருப்பதைக் கண்டு மருத்துவமனை நிர்வாகம் மீது கடுமையாக சாடினார். உதவி துணை இயக்குனர்;
திருத்தணி அரசு மருத்துவமனையில் அடையாள அட்டை அணியாத மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையை தூய்மையாக வைத்துக் கொள்ளாத மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகள் படுக்கைகள் கிழிந்து இருப்பதைக் கண்டு மருத்துவமனை நிர்வாகம் மீது கடுமையாக சாடினார். உதவி துணை இயக்குனர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் உள்ளது அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் உதவி துணை இயக்குனர் டாக்டர் கண்ணகி இந்த ஆய்வின் போது மருத்துவமனை நுழைவாயில் முன்பு குடிதண்ணீர் இருக்கும் பகுதியில் தூய்மை இல்லாமல் உள்ளது மருத்துவமனை தரைத்தளம் தூய்மையாக பணிகளை மேற்கொள்ளவில்லை வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் வெகுநேரமாக எப்படி இவர்கள் நின்று கொண்டு இருப்பது இவர்களுக்கு நாற்காலிகளை ஏற்பாடு செய்யவில்லை உடனடியாக அவர்களுக்கு நாற்காலி ஏற்பாடு செய்யுங்கள் என்று மருத்துவர் நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார் மேலும் மருத்துவமனை செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை யாரும் அடையாள அட்டை அணிய மாட்டீர்களா என்று மிகவும் மருத்துவமனை மருத்துவர்களை கடுமையாக கண்டித்தார் மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் இன்முகத்துடன் பணியாற்ற வேண்டும் என்று மருத்துவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினார் மருத்துவமனை நிர்வாகத்தில் குடிதண்ணீர் பிரச்சினை வராத அளவிற்கு மேம்படுத்த வேண்டும் மருத்துவமனை உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் பகுதியில் நோயாளிகள் படுக்கை அறைகள் கிழிந்த மெத்தை விரிப்பான் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இப்படியும் நீங்கள் மருத்துவமனை நிர்வாகத்தை எப்படி நடத்துகிறீர்கள் என்று கடுமையாக மருத்துவமனை நிர்வாகத்தை எச்சரித்தார் மேலும் இந்த ஆய்வில் கர்ப்பிணி தாய்மார்கள் கண் சிகிச்சை பெற வந்தவர்கள் குழந்தை பெற்ற தாய்மார்கள் போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று நோயாளிகளிடம் மருத்துவமனை நிர்வாகத்தால் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார் இந்த ஆய்வில் உதவித் துணை இயக்குனர் கூறுகையில் மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் மருத்துவர்கள், கூடுதல் செவிலியர்கள், லேப் டெக்னீசியன், போன்ற பணியிடங்களை கூடுதலாக நிரப்புவதற்கும் மேலும் மாவட்ட தலைமை மருத்துவமனையாக இந்த மருத்துவமனை தற்பொழுது தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் 52 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் இதற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவர்கள் முதல் அனைத்து பணியாளர்களையும் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து அரசிடம் இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்று உதவித் துணை இயக்குனர் டாக்டர் கண்ணகி தெரிவித்தார்..