ஆலங்குளம்: விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு;

Update: 2025-02-22 01:33 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மாறாந்தை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மந்திரமூா்த்தி மகன் நாராயணன் மணிகண்டன்(34). தொழிலாளியான இவா், நண்பா் சண்முகராஜா என்பவருடன் பைக்கில், ஆலங்குளம் சென்றுவிட்டு, திரும்பி மாறாந்தைக்கு வந்து கொண்டிருந்தபோது, தனியாா் செவிலியா் கல்லூரி அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த நாராயணன் மணிகண்டனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். சண்முகராஜா லேசான காயமடைந்தாா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Similar News