தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா இன்று (பிப்ரவரி 24) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம் அதிமுக சார்பாக இன்று சீவலப்பேரி பேருந்து நிலையத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டு ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தினர்.