ராமநாதபுரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் வருகை

இலங்கை தமிழர்கள் நால்வர் தனுஷ்கோடி நான்காம் மணல் திட்டில் தஞ்சம் இந்திய கடலோர காவல் படை மீட்டு விசாரணை:;

Update: 2025-02-24 08:22 GMT
ராமநாதபுரம் இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் அவரது மனைவி கிருபனா மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று இரவு மன்னாரில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி அடுத்த நான்காம் மணல் திட்டில் வந்து இறங்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் ஹோவர்கிராப்ட் ரோந்து படகும் மூலம் மணல் திட்டில் நின்று கொண்டிருந்தவர்களை பத்திரமாக மீட்டு ராமேஸ்வரம் மெரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இவர்கள் நால்வர் கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று ஐந்து ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News