வருஷநாடு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (53). இவர் தனது நண்பர் மணிகண்டன் என்பவருடன் நேற்று முன்தினம் (பிப்.25) காலை அவரது தோட்டத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் கருப்பையா மகன் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது வெவ்வேறு இடங்களில் கருப்பையா, மணிகண்டன் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.