நீதிமன்ற அனுமதி உடன் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி

முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உயர் நீதிமன்ற அனுமதி உடன் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டிக்கு தயாரான திருவள்ளூர் அடுத்த தங்கானூர் கிராமம்;

Update: 2025-02-27 08:09 GMT
திருவள்ளூர்- முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உயர் நீதிமன்ற அனுமதி உடன் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டிக்கு தயாரான திருவள்ளூர் அடுத்த தங்கானூர் கிராமம் தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள சண்டை சேவல் இனத்தை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளூர் மாவட்டம் தங்கானூர் கிராமத்தில் நீதிமன்ற அனுமதியுடன் சேவல் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐந்தாவது ஆண்டு சேவல் சண்டை போட்டி முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மார்ச் 1,2,3 ஆகிய தினங்களில் காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணி வரை சேவல் சண்டை போட்டி நடத்த கட்டுப்பாடுகள் உடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதில் சேவல்கள் காலில் கத்திகள் கட்டுவதும் மதுபானம் ஊற்றுவதும் சாதி மதம் பெயரை வைத்து அழைக்க கூடாது என நீதி மன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் சேவல்களுக்கு கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தும் போலீசார் பாதுகாப்பு அளித்தும் கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுரைத்துள்ளதை தொடர்ந்து. போட்டியில் களம் காண உள்ள சேவல்களுக்கு கடந்த 21 நாட்களாக காலை மாலை என தங்கானூர் பகுதியில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு வருகிறது. சேவல்களுக்கு பாதாம், பிஸ்தா கம்பு கேழ்வரகு சத்துமாவு பேரிச்சம்பழம் உணவுகள் கொடுக்கப்பட்டு தயார் படுத்தப்பட்டு வருகின்றன நடைபெற உள்ள போட்டிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா கேரளா புதுச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் இலங்கை நாடுகள் இருந்தும் சண்டை சேவல்கள் பங்கேற்க உள்ளது 1000 சேவல்கள் ஒரே நேரத்தில் களம் காணும் வகையில் இடம் தயர்நிலை செய்யப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் சேவல்களுக்கு தங்க மெடல் மற்றும் சான்றிதழ் முதல் மூன்று இடத்தில் பிடிக்கும் சேவல்களுக்கு பரிசுகள் அளிக்க விழா கமிட்டி முடிவு செய்துள்ளது.

Similar News