தேவதானப்பட்டியில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
விபத்து;
தேவதானப்பட்டி ஊர் துவங்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தேவதானப்பட்டி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட விபத்து வாகனங்கள் ரோட்டோரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அங்கு இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த வாகனங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என ஊர் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.