ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப.கார்த்திக் (18). இவர் கஞ்சா, மது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் பிப்.22.ம் தேதி அப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (மார்.1) சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை.