இரு சக்கர வாகனத்தில் மோதிய பிக்கப் வேன் நான்கு பேர் படுகாயம்
வழக்குப்பதிவு;
உப்புக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் குழந்தைகளின் காது குத்து விழாவிற்காக பத்திரிக்கை வைக்க பைக்கில் போடி சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது இவர்கள் பின்னால் ரவிக்குமார் என்பவர் ஓட்டி வந்த பிக்கப் வாகனம் இவர்களது பைக் மீது மோதியது. இதில் தம்பதியர் மற்றும் குழந்தைகள் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.