வடுகபட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (34). இவர் வடுகபட்டி பூண்டு மார்க்கெட்டில் கடை வைத்துள்ளார். நேற்று (மார்.2) இவருக்கும் அதே பகுதியில் கடை வைத்துள்ள முருகன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது திடீரென ராஜேஷ்குமார் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரணை.