எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு பூமி பூஜை
எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு பூமி பூஜை;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் மொளசி ஊராட்சியில் ரூபாய் 2.10 கோடி மதிப்பீட்டில் புதிய எரிவாயு தகனமேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.K.S.மூர்த்தி Ex.MLA ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தனர் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் G.தங்கவேல்,கொமதேக மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் மற்றும் திமுக,கழக நிர்வாகிகள்,கொமதேக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்…