அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார தின விழாவை யொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜாக்கமங்கலம் தென்பாற்கடற்கறை தவவனத்தில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது காலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் பகல் உச்சி படிப்பும் மாலை திருஏடு வாசிப்பும் நடந்தது. விழாவுக்கு குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார், வளவன் பேராசிரியர் ஆர். தர்மரஜினி , ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் திருஏட்டினை செண்பகப் பெருமாள், மாலதி , அரிதா ஆகியோர் வாசித்தனர். பின்னர் அன்னதர்மம் நடந்தது.